முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் இன்று  முதல் அடுத்த 3 தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து