முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்து: சீனாவில் 47 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், சீனாவில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 47 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சீனாவின் வடக்குப பகுதியில் உள்ள ஷாங்காய் நகரத்திலுள்ள யான்சென்ங்கில் ரசாயன கிடங்கு ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாததால் இதில் 47 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பள்ளி செல்லும் குழந்தைகளும், சிறுவர்களும் அடக்கம். தீ வெடி விபத்தினால் அருகிலுள்ள வீடுகளில் கதவு, ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று சினுவா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து