முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது: பும்ராவின் தீவிர ரசிகன் நான்: ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் தீவிர ரசிகன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் சொன்னார்.

சிறப்பான ஆட்டம்...

சென்னை வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: -தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வார்னரும் ஸ்மித்தும் ஐபிஎல்-ல்லு திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். ஒரு வருட தடை, அவர்களுக்கு ரன் பசியை அதிகரித்துள்ளதால் நன்றாக விளையாடுவார்கள். இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினால் மற்ற வீரர்களுக்கு சிக்கல் வருமா என்று கேட்கிறார்கள்.

தலைவலியாக...

வார்னர் வந்தால், தொடக்க ஆட்டக் காரராக களமிறங்குவார். உஸ்மான் கவாஜா மூன்றாம் இடத்திலும் ஸ்மித் நான்காம் இடத்திலும் களமிறங் குவார்கள். இதனால், அணியை தேர்வு செய்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு சுகமான தலைவலியாகவே இருக்கும். சமீபத்தில் இந்தியாவில் நடந்த தொட ரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியிருப்பது, உலகக் கோப்பைக்கு முன் நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

தீவிர ரசிகன் நான்

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பும்ராவின் தீவிர ரசிகன் நான். அவர் பந்துவீசும் ஸ்டைல், கடைசி கட்டத்தில் அவர் வீசுகிற யார்க்கர், சரியான இடத்தில் பந்தை வீசுவது எல்லாம் தனித்துவமாக இருக்கிறது. அவரும் புவனேஷ்வர்குமாரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள். புவனேஷ்வர்குமார் சிறப்பாக ஸ்விங் செய்கிறார். அவர் நன்றாக விளையாட வேண்டும்.

இந்திய கேப்டன் விராத் கோலி, ஆக்ரோஷமான வீரர். விளையாட்டுக்குள் தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டு எப்போதும் ஆடுவது முக்கியமான ஒன்று. அதை கோலி நன்றாகவே செய்கிறார். இவ்வாறு கிளன் மெக்ராத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து