முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி முன்னிலையில் சத்ருகன் சின்கா காங்கிரசில் இணைகிறார்

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : பாஜகவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக சத்ருகன் சின்கா இன்று அல்லது நாளை ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார்.     பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன்சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது.

இதை தொடர்ந்து தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.

தற்போது ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிருப்தி அடைந்துள்ள சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (24-ந்தேதி) அல்லது நாளை   (25-ந்தேதி) பீகார் செல்கிறார். அப்போது அவர் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் சேர்கிறார். சத்ருகன் சின்கா காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

அவர் 2009 தேர்தலில் 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2014 தேர்தலில் 2.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். அந்த தொகுதியில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. சத்ருகன்சின்கா, வாஜ்பாய் மந்திரிசபையில் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து