எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் : பிரியாணி உணவகம், செல்போன் கடை உட்பட எல்லாக் கடைகளிலும் அராஜகம் செய்யும் தி.மு.க.வினர், ஆட்சிக்கு வந்தால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். மேலும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான அறிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னல் வேக பிரச்சாரம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனது மின்னல் வேக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஏழை மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை வழக்குப் போட்டு கெடுக்கும் தி.மு.க. என்று முதல்வர் குற்றம் சாட்டினார். நேற்று தனது பிரச்சார பயணத்தை தொடர்ந்த அவர் கொளுத்தும் வெயிலில் வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடியில் அவர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வரின் பேச்சை பொதுமக்கள் திரண்டு வந்து கேட்டனர்.
2-வது நாள் பிரசாரம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் சேலம் இணைப்பு சாலையில் இருந்து தனது 2-வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து சேலம் இணைப்பு சாலை சந்திப்பு, திருப்பத்தூர், ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வாக்குறுதிகளை...
அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் பொற்கால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எதை செய்ய முடியுமோ அதை மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் அம்மா வெளியிட்டார். குறிப்பாக, 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அறிவித்து அதன்படி அவர் வழங்கினார். மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கி கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். தான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.
பல்வேறு நிறுவனங்கள்...
இந்த தேர்தலில் அமைந்துள்ள கூட்டணி. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி. மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. வெளி மாநிலங்களில் இருந்து தொழில் தொடங்குவதற்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. தி.மு.க. ஆட்சியிலே இது போன்ற தொழிற்சாலைகள் தொடங்கியது உண்டா? என்றால் நிச்சயமாக இல்லை.
தி.மு.க ஆட்சியில் அராஜகம்
தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் அராஜகம் இருந்தது. அந்த அராஜகங்களை இரும்புக்கரம் கொண்டு அம்மாவின் அரசு ஒடுக்கியது. ஆனால் இன்று எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதே பிரியாணி கடைக்கு சென்று உணவருந்தி விட்டு அதற்கு பணம் கொடுக்காமல் உரிமையாளர்களிடம் தகராறு செய்வது, அழகு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள பெண்களை அடித்து உதைப்பது, செல்போன் கடைக்கு சென்று அராஜகத்தில் ஈடுபடுவது, இது போன்ற எண்ணற்ற மக்கள் விரோத செயல்களில் தி.மு.க. வினர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆளும் கட்சியாக வந்தால் யாரும் சுதந்திரமாக ரோட்டில் நடமாடக் கூட முடியாது என்பதுதான் உண்மை. அதே போல எங்கே விலைமதிப்புள்ள நிலங்கள் இருக்கிறதோ, அதை அபகரிக்கும் முயற்சியிலும் தி.மு.க.வினர் ஈடுபடுவார்கள். இதையெல்லாம் சிந்தித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கொள்கை இல்லாதது...
தி.மு.கவும் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. அது கொள்கையில்லாத கூட்டணி. ஸ்டாலின் ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போதும் ஒவ்வொருவரை பிரதம வேட்பாளர் என கூறி வருகிறார். தி.மு.க கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற போது விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற பெய்யான அறிக்கையை கொடுத்து மக்களை தி.மு.க ஏமாற்றி வருகிறது. நாளுக்கு ஒரு அறிக்கை கொடுத்து கொல்லைப்புறம் வழியாக வாக்குகளை பெற தி.மு.க முயற்சிக்கிறது.
சட்டம் - ஒழுங்கு....
திருவண்ணாமலை அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தவர். இவர் வெற்றி பெற்றால் அத்தொகுதியில் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தி.மு.கவை சேர்ந்தவர்கள் வென்றால் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சராவார்கள். குடும்பத்தை மட்டுமே வளர்ச்சியடைய செய்வார்கள். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்ட கூட்டணி. அதே போல் முதல்வராக ஜெயலலிதா (அம்மா) பொறுப்பெற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் கிடையாது. இதை அறவே ஒழித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
10 லட்சம் பேருக்கு...
ஒரு ஆட்சி சிறப்பாக நடைபெற சட்டம் ஒழுங்கு முக்கியம். மேலும் அண்மையில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்தி 431 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை 2,500 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஓடை, ஆறுகளில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தை நடைமுறை படுத்த 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை நியாமித்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர். அதே போல் மறைந்த சாதிக்பாஷா மனைவியின் கார் அண்மையில் தாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அ.தி.மு.க அரசு கவனித்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.