முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் வெயில் எதிரொலி: காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர் : கடும் வெயிலால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால் காலையில் 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வழக்கத்திற்கு முன்பாகவே கோடைக்காலம் தொடங்கி விட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இறுதித் தேர்வு நடைபெற்ற வருவதால் பெரும்பாலான வகுப்புகள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடத்தப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் வெயிலில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வரும் 2-ம் தேதியில் இருந்து காலை 6.30 மணிக்கு பள்ளிகளில் பாடங்களை தொடங்க வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து