முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது : பியூஷ் கோயல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் மகளிர் அமைப்பினருடன் கலந்துரையாடிய அவர் பேசுகையில்,

வரும் பாராளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெறும். பா.ஜ.க. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 60 இடங்களாக சுருங்கிப் போகும். அவர்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்.

பாராளுமன்ற தேர்தலுக்கு 60 நாட்களுக்கு முன் பிரியங்கா அரசியலில் திணிக்கப்பட்டுள்ளார். தோற்றுப் போன தனது சகோதரர் ராகுலை, நெருக்கடிகளில் இருந்து வெளியே எடுக்கும் ஒரே நோக்கத்திற்காக அவர் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். திடீரென மாயமாகி விடுபவர்களை விட தீவிரமான அரசியல் தலைவர்களே நாட்டிற்கு தேவை. அயோத்தியில் ராமர் கோயில் அமையும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் புதிதாக குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து