முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் வருமானம் அதிகரித்தது எப்படி?:மத்திய அமைச்சர் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஒவ்வொரு தேர்தலின் போதும் ராகுலின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி என மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் கடந்த 2004-ம் ஆண்டு வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பாக ரூ. 55 லட்சத்து 38 ஆயிரத்து 123 ஆக கணக்கு காண்பித்துள்ளார். வருமான வருவாய், சம்பளம் வேறு எந்ததெளிவான ஆதாரமும் இல்லாத நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு பொது தேர்தலின் போது 2 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து மதிப்பு உள்ளதாக காண்பித்துள்ளார். அதே போல் 2014-ம் ஆண்டு பொது தேர்தலின் போது 9 கோடி ரூபாய் அளவிற்கு தன்னுடைய சொத்து மதிப்பாக கணக்கு காண்பித்துள்ளார் . 2004-ம் ஆண்டில் 55 லட்சம் ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு 2014-ல் 9 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி என்பதை அறிய விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து