எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் : கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்று வேலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டசபை தொகுதி வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து, சத்துவாச்சாரி, ஆற்காடு பேருந்து நிலையம், முத்துக்கடை, சோளிங்கர், பானாவரம் கூட்டுரோடு ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது மூன்றாவது நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். நான் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து வாக்குக் கேட்டு வருகிறேன். செல்லுமிடம் எல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து எங்களை வரவேற்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆதாரிக்க வேண்டிய திட்டங்களை ஆதரிக்கும், எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கும். அ.தி.மு.க.வின் கொள்கையை ஒருபோது விட்டுக் கொடுக்காது. தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உண்மைக்கு மாறான அறிக்கை. அவர்கள் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஊழல் என்று சொல்லி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. என்பதை அவர் மறந்து விட்டு பேசுகிறார். அவர் தேடித் தேடி பார்க்கிறார். எங்கேயும் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அ.தி.மு.க.வை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. தி.மு.க. எவ்வளவோ போராட்டங்களை நடத்தினாலும் அனைத்து போராட்டங்களிலும் வெற்றி காணும் வகையில் போராடுபவர்களை அழைத்து அவர்களிடத்தில் சமாதானமாக பேசி, போராட்ங்களை முடிவுக்கு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு. தி.மு.க. தூண்டுதலின் பேரில் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், அத்தனை போராட்டங்களையும் முறியடிக்கின்ற சக்தியும் ஆற்றலும் இந்த அரசுக்கு உண்டு.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டுபிடித்தது இந்த அரசு தான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுத்து அவர்களை வெளியில் கொண்டு வருபவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சந்தேகங்களை தீர்த்து வைப்பது அரசினுடைய கடமை. எனவே, யார் தவறு செய்திருந்தாலும், தப்பிக்க முடியாது. உரிய நடவடிக்கை அரசு எடுக்கும். சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் சார்பில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி நாளிதழ்களில் நினைவஞ்சலி விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், சாதிக் பாட்சா மனைவி காரிலே சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்தும் உரிய விசாரனை மேற்கொள்ளப்படும்.
தி.மு.க. கூட்டணியில் தற்போது சேர்ந்துள்ள வைகோ, என் உயிர் உள்ளவரை, ஸ்டாலினை முதலமைச்சராக வர விடமாட்டேன் என்றும், தி.மு.க. குடும்ப ஆதிக்க கட்சி என்றும் கூறினார். ஆனால் இன்று அவரை, தங்கள் கூட்டணியில் சேர்த்தது எப்படி, இதையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வெளித்தோற்றத்தில் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது அவருக்கு தெரியாதா? ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார். எறும்பு தேய்ந்து கட்டெறும்பான கதையாக கட்சி துவங்கி மக்களின் ஆதாரவைப் பெறாமல், சிறிது சிறிதாக மக்கள் செல்வாக்கை இழந்துள்ள கட்சிகளோடு ஸ்டாலின் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் ஜாதி கலவரம் இல்லை, மதக் கலவரம் இல்லை, மிகவும் அமைதியான முறையில் மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அரசு அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. இதற்கான விருதும் இந்திய துணை ஜனாதிபதியால் வழங்கப்பட்டு, அதை நான் பெற்றுக் கொண்டேன். சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக செயல்படுவதற்கு இந்தியாவில் இருக்கின்ற காவல் நிலையங்களில் கோவை, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், அண்ணா நகர் காவல் நிலையம் ஐந்தாவது இடத்தையும், பெரியகுளம் காவல் நிலையம் எட்டாவது இடத்தையும் பெற்றிருப்பதே சாட்சி ஆகும்.
ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சாரத்திலே என்னை கடவுள் என்று கூறியிருக்கிறார். நான் ஒரு சாதாரண விவசாயி. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அப்படி தெரியும். நான் என்றுமே என்னை ஒரு முதல்வராக நினைத்தது இல்லை. நான் தொண்டனாக இருக்கிறேன். ஆனால் ஸ்டாலின் தலைவனாக இருந்து பார்க்கிறார். மக்கள் கொடுக்கின்ற அன்பு தான், எனக்கு பரிசு. நான் 1974-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளாராக என்னுடைய அரசியல் வாழ்க்கையை துவக்கி இன்று படிப்படியாக பல்வேறு பொறுப்புகளைப் பெற்று உயர்ந்து முதல்வராக இருக்கின்றேன். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல, அவரது தந்தை தி.மு.க. தலைவராக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்பு அவரே தலைவராகி விட்டார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மாவின் அரசு என்றும் அரணாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது. இப்தார் நோன்பு கஞ்சிக்காக 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய அரசு அம்மா அரசு. அதே போன்று நாகூர் தர்கா சந்தன கூடு விழாவிற்கு சந்தனம் வழங்கிய அரசும் அம்மாவின் அரசு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மத்திய அரசு மானியத்தை நிறுத்திய போதும், இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ரூ.6 கோடி மாநில அரசின் நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது கல்வி நிறுவனத்தின் மூலம் இலவசமாக கல்வி வழங்குவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்திலும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சம்பத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.