எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஒசி பிரியாணி, பஜ்ஜிக்காக ரகளையில் ஈடுபடும் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூ, பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து சென்னையில் பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த ஜீப்பில் நின்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க.வினர் அராஜகம்...
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின் போது, தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகத்தை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். சட்டமன்றம் என்பது மிகுந்த கண்ணியத்திற்குரியது. அந்த அவையில் சபாநாயகர் இருக்கைக்கு என்று ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் அதை சீர்குலைக்கின்ற வகையில், சபாநாயகரை கிழே தள்ளியும், அவரது மேஜையை அப்புறப்படுத்தியும், முதலமைச்சர், அமைச்சர்கள் மேஜை மீது ஏறி நின்று அநாகரிகமான முறையில் விதிக்கு மாறாக நடந்துகொண்டார்கள். இந்த செயலினை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.கவினர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
தி.மு.கவின் வாடிக்கை...
அ.தி.மு.க. 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என ஜெயலலிதா குறிப்பிட்டார், அம்மாவின் எண்ணங்களை நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோ. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கு காரணமாக இருந்த துரோகிகள், இந்தத் தேர்தலோடு காணமல் பேய்விடுவார்கள் என்பது தான் உண்மை. பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ.1000 அரசால் வழங்கப்பட்டது. அதை வழங்கக் கூடாது என்று தி.மு.கவினர் நீதிமன்றம் சென்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததின் அடிப்படையில் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. ஏழை, எளியவருக்கு அரசால் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதுதான் தி.மு.கவின் வாடிக்கை. இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திடஇரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தேவையான குடிநீர்...
சென்னையைப் பொறுத்தவரையில் பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைத்திடவும் உரிய நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வாழ்மக்களுக்கு தேவையான குடிநீர் முறையாக கிடைத்திடவும் அரசு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் 16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, வீடுகள் இல்லாதோர் யாரும் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு நிலையை நிச்சயமாக ஏற்படுத்தப்படும்.
போராட்டங்கள்...
மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. பற்றி தப்புக்கணக்கு போட்டார். இந்த ஆட்சி 10 நாட்கள் நீடிக்குமா, ஒரு மாதம் தாக்குப்பிடிக்குமா என்று சொல்லி வந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் எத்தனைப் போராட்டங்கள் நடைபெற்றது. இது வரை எந்த முதலமைச்சரும் சந்திக்காத போராட்டங்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்து, அதிலும் இந்த அரசு வெற்றி கண்டிருக்கிறது. இது போன்ற போராட்டங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது தி.மு.க தான். தி.மு.கவினர் அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, ஓசி புரோட்டா கேட்டும், ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி கேட்டும், செல்போன் கடைகளில் தகராறு, அழகு நிலையத்தில் அங்குள்ள பெண்களுடன் தகராறு போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.