முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா எல்லையில் பாலஸ்தீனியர்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

காசா நகரம் : இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடந்த மே மாதம் 14-ம் தேதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின் எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் நேற்று இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் ஒன்று திரண்டனர்.  இஸ்ரேலில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பதற்றம் நிறைந்த இந்த சூழலில் எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிறு இளைஞர் குழுக்கள் காசா நகரின் கிழக்கே வேலியை அணுகி அதனை பலமுறை உடைக்க முற்பட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டும் பலனின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கற்களை வீசி பாலஸ்தீனிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து