முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலுடன் கூடிய கனமழை நேபாளத்தில் 27 பேர் பலி

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

காத்மாண்டு,  நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையில் சிக்கி 27 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்ததில் 27 பேர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 128 கி.மீ. தொலைவில் உள்ள பாரா மாவட்டம் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அவசர மேலாண்மை மைய பிரிவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில், ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக நேபாள நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து