முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ குழு அமைத்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டாக்டர்கள் கொண்ட மருத்துவக் குழு அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் தங்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

ஐகோர்ட்டில் தள்ளுபடி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், தங்களது தரவுகளை தவறாக புரிந்து கொள்வதாக அப்பல்லோ  மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது. எனவே  டாக்டர்கள்  கொண்ட மருத்துவக்குழு அமைத்து தங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடியானது.

ஆஜராகவில்லை

இதையடுத்து நேற்று அப்போலோ மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில்  அப்பல்லோ  நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளதால், சம்மன் பெற்ற யாரும் ஆஜராகவில்லை. மேல்முறையீடு காரணமாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணை காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து