முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்றி சாதனை நிகழ்த்த வேண்டும்: பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்றது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அதில், முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று அதில் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து