முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர மாநிலத்தில் வாக்களித்த உலகிலேயே மிக குள்ளமான பெண்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

நாக்பூர் : மகராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் தொகுதியில் உலகிலேயே மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்கினை பதிவு செய்தார்.

மகராஷ்டிர மாநிலத்தில் நேற்று 11-ம் தேதி துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று காலை 7 மணி முதலே அம்மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போல் மக்களும் காலை 7 மணி முதல் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில் உலகின் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே மகராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நேற்று காலை மகிழ்ச்சியுடன் வாக்களித்தார்.

உலகின் மிகவும் குள்ளமான ஜோதி அம்கே கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ ஆகும்.  ஜோதி அம்கே ஜோதி அம்கே வாக்களித்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து