முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு தொகுதியில் பினராயி விஜயன் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கேரளாவில் உள்ள 20 எம்.பி. தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் எண்ணத்துடன் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இது கேரள காங்கிரசாரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுனிர், பா.ஜனதா கூட்டணி சார்பில் பாரத் தர்ம ஜனசேனா கட்சி தலைவர் துஷார் வெள்ளாப் பள்ளி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

கேரளாவில் வயநாடு தொகுதியில் தான் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவதால் இங்கு ராகுல் வெற்றி பெறுவது எளிது என்று அந்த கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதே சமயம் வயநாடு தொகுதியில் ராகுலை தோற்கடித்து தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது.

இதற்காக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனிரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாடு தொகுதி கல்பட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கேரள மாநிலத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி மக்களை திசை திருப்பி, அவர்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியதை பா.ஜனதா ஏன் நிறைவேற்றவில்லை? தற்போது மீண்டும் தாங்கள் செயல்படுத்த போகும் திட்டங்களை கூறி ஓட்டு கேட்கிறார்கள்.
சொன்னதை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியவில்லை. அதனால் பா.ஜனதா இதுபோன்ற கபட நாடகம் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வயநாடு தொகுதி மட்டுமல்ல கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதியிலும் கம்யூனிஸ்டு கூட்டணி தான் வெற்றி பெறும். மக்கள் கம்யூனிஸ்டு கட்சி பக்கம் தான் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து