எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நகரம் மற்றும் திருமங்கலம், கள்ளிக்குடி,டி. கல்லுப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், கழக அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து உரையாற்றினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற பொதுதேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தமிழகமெங்கிலும் சூடுபிடித்து வருகிறது.இந்நிலையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்திடும் கோடைவெயிலுக்கு மத்தியிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிரடியாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பாரம்பரியம் மிக்க விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க.வைச் சார்ந்த ஆர்.அழகர்சாமி போட்டியிடுகிறார். சாமானிய வேட்பாளரான அழகர்சாமி, அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் துணையுடன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் மறவன்குளம் பகுதியில் அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து மறவன்குளம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜையுடன் சூறாவளி பிரச்சாரம் தொடங்கியது.தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவங்கிய இந்த பிரச்சார பயணத்திற்கு தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கணபதி,திருமங்கலம் அ.தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.இதையடுத்து திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் வெற்றி குலவையிட்டும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதை தொடர்ந்து திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை,தேவர் திடல் மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகளில் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர் அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஷ்சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் நகரில் மூன்று இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழுச்சிமிகு உரையாற்றி தோழமை கட்சியான தே.மு.தி.க.வின் வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டினார்.அப்போது அதிக அளவிலான இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்து தங்களது வாக்கு கொட்டும் முரசு சின்னத்திற்கே என்று குரலெழுப்பி உறுதி செய்தனர்.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பிரச்சார கூட்டங்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டு வந்திருந்த நிகழ்வு எதிர்கட்சியினரை கலக்கமடையச் செய்வதாக அமைந்தது.
அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் திருமங்கலம் நகரில் ராஜாஜி சிலை,தேவர் சிலை,சந்தைப்பேட்டை ஆகிய இடங்களிலும் திருமங்கலம் ஒன்றியத்திற்கு மறவன்குளம், உச்சப்பட்டி, கரடிக்கல், கீழக்கோட்டை, ஆலம்பட்டி ,மேலஉரப்பனூர், சாத்தங்குடி, நடுவக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களிலும்,கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.குண்ணத்தூர்,வன்னிவேலம்பட்டி,டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சந்திப்பு, கல்லுப்பட்டி தேவர்சிலை,எம்.சுப்புலாபுரம்,கூவலப்புரம்,சந்தையூர்,பேரையூர் அரசமரம் சந்திப்பு,பேரையூர் ஆ.தி தெரு,கொல்லவீரம்பட்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லூர், புளியங்குளம், சித்தூர், தென்னமநல்லூர், கே.வெள்ளாகுளம், கள்ளிக்குடி சத்திரம், ஓடைப்பட்டி, சென்னம்பட்டி,குராயூர், சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி. செங்கப்படை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டினார்.மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரமும்,அவற்றில் அலைகடலென மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்த நிகழ்வும் அ.தி.மு.க கூட்டணி கட்சியினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்த பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம், கல்லுப்பட்டி ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், முன்னாள் யூனியன் துணை சேர்மன்கள் பாவடியான்,கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் அன்னலட்சுமி, பிரபுதங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம், திருமங்கலம் நகர் நிர்வாகிகள் ராஜாமணி, கலைச்செல்வன், சுரேஸ், இன்பம், சிவகுமார், சிவணான்டி,சந்திரன், மாதவன், முகேஷ்,ஆனந்த், மரக்கடைராஜா, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், திருமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் அவைதலைவர் அன்னக்கொடி, துணை செயலாளர் சுகுமார், சுமதி சாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம்,பழனிச்சாமி, கீதாஆறுமுகம், பிச்சமணி, சாமிநாதன்,சிவன்காளை,கட்டாரி வேல்முருகன்,சிவஜோதி தர்மர்,பி.ஆர்.சி. ராதாகிருஷ்ணன், சிங்கராஜபாண்டியன்,ஜெய.சி.செல்வகுமார்,கொடிவைரன், சின்னன்,மீனாலட்சுமி,மற்றும் தே.மு.தி.க திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,துணை செயலாளர் சின்னசாமி,ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திருமலைச்செல்வி, பா.ஜ.க.நிர்வாகி சசிகுமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.