முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிப்பு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன் உரிமைக்காக போராடுங்கள் என என கூறினார்.

நேற்று நடந்த வாக்குப்பதிவின் போதுநடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதே சமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. ஆனால் கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறும் போது வாக்களிப்பது உங்கள் உரிமை. அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து