முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் செவன்த் டே பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று வாக்களித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களும் வாக்களிப்பு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

தேனி : பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அவரது தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தாருடன் வந்து தென்கரை செவன்த்டே பள்ளியில் அமைக்கப்பட்டுருந்த வாக்கு சாவடியில் சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

ரவீந்திரநாத் குமார்...

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்ற நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.  தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார்,  பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். 

லோகிராஜன்...

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் முத்தனம்பட்டியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.  பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல் அல்லிநகரம் முத்தையா பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து