முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நேபாள் அனுப்பிய முதல் செயற்கைக்கோள்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

காத்மாண்டு, நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் முதன் முறையாக செயற்கைக் கோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. நேபாள்சாட்-1 என பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக் கோளை நேபாளத்தை சேர்ந்த ஆப்காஸ் மாஸ்கி மற்றும் ஹரிராம் ஸ்ரெத்தா ஆகியோர் தயாரித்தனர். அந்த செயற்கைகோள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 2.31 மனிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி தெரிவித்துள்ளது. நேபாளம் முதன்முறையாக சொந்தமாக தயாரித்த செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இது நாட்டுக்கு பெருமை என நேபாள பிரதமர் கே.ஆர்.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து