எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரமக்குடி - :பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் சித்திரைத் திருவிழா, கடந்த 15 ந்தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய விழாவாக நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூப் பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் மஞ்சள் பட்டுத்தி வெள்ளி கிண்ணத்தில் பால் பாயசம் சாப்பிட்டு கள்ளழகர் திருக்கோலத்துடன் நூற்றுக்கணக்கான தீவட்டிகள் மற்றும் வான வேடிக்கைகள் வெளிச்சத்தில் கோவிந்தா! கோவிந்தா! என்ற பக்தர்களின் கோஷங்களுக்கிடையேயும், கள்ளழகர் வர்ணிப்பு பாடலுடன் நேற்று அதிகாலை 3.25மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். கள்ளழகர் மஞ்சள் பட்டுத்தி வைகையாற்றில் இறங்கியதன் மூலம் இந்தாண்டு நல்ல மழை பொழிந்து நாடு செல்வ செழிப்போடு விளங்கும் என்பது ஐதீகம்.
இந்நிகழ்ச்சியினை , பரமக்குடி, எமனேசுவரம், ராமநாதபுரம்,மதுரை, இளையாங்குடி, திருச்சி, கும்பகோணம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.தொடர்ந்து வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் ( பெருமாள்) பல்வேறு மண்டகப் படிகளுக்குச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தப் பின்பு,மேலச்சத்திரத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப் படியினை சென்றடைந்தார்.
அங்கு நேற்று காலை 9.15 மணிக்கு கோவிந்தா! கோவிந்தா! என்ற பக்தர்களின் கோஷங்களுக்கிடையே கள்ளழகர் ( பெருமாள் ) , குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதுசமயம், நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பீச்சாங்குழல் என்னும் துரத்திகள் மூலம் மஞ்சள் நீரை பெருமாளுக்கு பீச்சி அடித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பெருமாள், நேற்று இரவு வண்டியூர் என்னும் காக்காத் தோப்பு மண்டகப் படியினை சென்றடைந்தார். அங்கு பெருமாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் விசேச தீபாரதணைகள் நடந்தன.
முன்னதாக, வைகையாற்று பாலம் பகுதியில் இருந்து " ஆயிரம் பொன் " சப்பரம் என்னும் பெரிய தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வைகையாற்று மணலில் கோவிந்தா! கோவிந்தா! என 2 கி.மீ.தூரம் இழுத்து வந்து காக்காத் தோப்பு மண்டகப் படியில் சேர்த்தனர்.விசேஷ தீபாரதணைகள் நடந்தன.
திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி டி.எஸ்.பி.சங்கர் தலைமையில் போலீசார்கள்,ஊர்க் காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.தொடர்ந்து இன்று வைகையாற்றில் அமைந்துள்ள வாணிய உறவின் முறையார் மண்டகப் படியில் எழுந்தருளும் பெருமாளுக்கு விடிய விடிய தசாவதார காட்சிகள் நடக்கின்றன.
பின்பு 21,22 ம்தேதி பல்வேறு மண்டகப் படிகளில் பெருமாள் காட்சியளிக்கிறார். தொடர்ந்து 23 ம்தேதி காலை பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூ பல்லக்கில் நகருக்குள் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.தொடர்ந்து அன்று மாலை கள்ளழகர் வர்ணிப்பு பாடல்களுடன் பெருமாள் கோவிலை சென்றடைகிறார். அங்கு அன்று இரவு கண்ணாடிசேவை நடக்கிறது.
தொடர்ந்து 25 ம்தேதி காலை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துநேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.பின்பு பெருமாளுக்கு பக்தர்கள் செலுத்திய பாலினால் பாலாபிசேகம் நடக்கிறது.அன்றிரவு பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி நகரில் வீதிவலம் சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருவிழாவைத் தொடர்ந்து கோவில் முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜொலிக்கின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோவிலின் டிரஸ்டிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.