முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்த அவர் முருகப்பெருமானை மனமுருக வேண்டினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ராகவா லாரன்ஸ் வந்ததைப் பார்த்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அனைவருக்கும் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்டார். குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் செல்பி எடுத்துக் கொண்டனர். தமிழ் புத்தாண்டுக்காக பழனி முருகன் கோவிலுக்கு வர முடிவு செய்ததாகவும், ஆனால் 2 நாட்கள் கழித்துத் தான் வர முடிந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தனது காஞ்சனா_3 படம் வெற்றி பெற பழனி முருகனை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்டபோது அதற்கு கோவில் இடமில்லை என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து