முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரசின் 5 பெட்டிகள் தடம் புரண்டது

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை நேற்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது.

அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து