முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்றுதான் - கேரளாவில் பிரியங்கா பிரச்சாரம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி என பிரியங்கா காந்தி கூறினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசு ஒரு பெரிய பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்தது. நாட்டு மக்கள் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால் அந்த அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல் நம்பிக்கை துரோகம் செய்ய ஆரம்பித்தது. கலாச்சாரத்தில் மாறுபட்ட மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியைம் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன.

பழங்குடி மக்களின் கலாச்சாரம், வயநாடு மக்களின் கலாச்சாரத்தை உணர்கிறேன். தமிழகம், உ.பி., குஜராத் அனைத்தும் எனது மாநிலமே. அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து