முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த ஆணையத்துக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் வேலூர் நீங்கலாக உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் கடந்த 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 10 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்துள்ளார். அவர் தனது பரிந்துரையில்,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி 8, பூந்தமல்லி 1, கடலூர் 1, தருமபுரி- 8, கடலூர் - 1, திருவள்ளூர் - 1 என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற பரிந்துரைத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து