முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார் ராகுல்: பியூஷ் கோயல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்த பின்னர், ராகுல் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார்  என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். 

அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்,

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி, ராகுலை வீழ்த்துவார். வயநாட்டிலும் ராகுல் தோல்வியை தழுவுவார். இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார் என கூறினார்.

ஸ்மிருதி இராணியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார். வயநாட்டில் இடது சாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்கப் போவதில்லை என கூறுகிறார். அவர் அச்சத்துடன் உள்ளார். ஜனநாயகத்தில், தனது எதிர்ப்பாளர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு சேவை செய்ய இயலாது. இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து