முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஓவரில் சிறப்பாக ஆடிய டோனி பயத்தை காட்டிவிட்டார் - பெங்களூரு கேப்டன் கோலி பேட்டி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டோனி பயத்தை காட்டி விட்டார் என விராட் கோலி கூறியுள்ளார்.

3-வது வெற்றி...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. சேப்பாக்கத்தில் ஏற்கனவே தோற்றதற்கு அந்த அணி பதிலடி கொடுத்தது. பெங்களூரு அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். வெற்றி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

எதிர்பார்த்தேன்...

இந்த போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. 19-வது ஓவர் வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது. ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி ஓவரில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அதை டோனி செய்துவிட்டார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் ஒட்டு மொத்த அணிக்கும் மிகப்பெரிய பயத்தை காட்டி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து