எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை தகர்த்துள்ளனர்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்பு மற்றும் மட்டகளப்பில் அடுத்தடுத்து 8 குண்டுகள் வெடித்தன.
இதில் 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 7 இடங்களில் மனித வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.
இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பழிக்கு பழி வாங்க.....
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமக் நியூஸ் ஏஜென்சி மூலம் அறிவித்துள்ளனர்.
மேலும் 3 நட்சத்திர ஓட்டல்கள், 3 தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய 7 மனித வெடிகுண்டுகள் நிற்கும் படத்தையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் முகமது ஜக்ரன் என்ற ஜக்ரன் கஸ்மி என்பவன் தலைமையில் 7 தற்கொலை பயங்கரவாதிகள் நிற்பது தெரிய வந்துள்ளது.
7 பேருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள்....
இந்த 7 பேரும்தான் கொழும்பு நகரை குறி வைத்து தகர்த்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 7 பேருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களை பற்றிய தகவல்களை இலங்கை ராணுவமும், போலீசாரும் ஒருங்கிணைந்து சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
7 மனித வெடிகுண்டு தற்கொலை பயங்கரவாதிகளில் 2 பேர் அண்ணன்-தம்பி ஆவார்கள். அவர்கள் இருவரும் இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகன்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த கோடீஸ்வரர் கொழும்பில் வத்தல் மிளகாய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
அண்ணன்-தம்பி இருவருமே இஸ்லாமிய மத கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணன்- தம்பி இருவரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்துக் கொண்டனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த தொடர்பு கோடீஸ்வரர்களாக திகழ்ந்த அண்ணன்-தம்பி இருவரையும் பயங்கரவாதிகளாக மாற்றி விட்டது.
அண்ணன்-தம்பி இருவரும் பயங்கரவாத இயக்கத்தினருடன் நெருங்கி பழகியது அவர்களது உறவினர்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு மிக மிக ரகசியமாக அவர்கள் தங்கள் தொடர்பை வைத்து இருந்திருக்கிறார்கள்.
நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்த போது இவர்களும் அதை அறிந்துள்ளனர். தெற்கு ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி செய்தபோது அவர்களுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் ஆதரவாக இருந்துள்ளது.
அதைத் தொடர்ந்துதான் இலங்கையில் கைவரிசை காட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில்தான் இந்த அண்ணன்-தம்பி இருவரும் தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற சம்மதித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பயிற்சியும் எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று ஒத்திகையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அண்ணன்-தம்பி இருவரும் முதலில் சின்னமான் கிராண்ட் ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு சங்ரி-லா ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பணக்கார வீட்டு பிள்ளைகள் என்பதால் மிக எளிதாக அவர்களால் நட்சத்திர ஓட்டல்களுக்குள் செல்ல முடிந்தது.
சின்னமான் கிராண்ட் ஓட்டலில் ஒருவரும், சங்ரி-லா ஓட்டலில் மற்றொருவரும் அறை எடுத்து சனிக்கிழமை தங்கி உள்ளனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தினார்கள்.
அண்ணன்-தம்பி பயங்கரவாதிகள் என்பது பற்றிய தகவல்களை உறுதி செய்துள்ள கொழும்பு போலீசார் அவர்களது பெயர் மற்றும் அவர்களது பெற்றோர் பெயரை வெளியிட மறுத்து விட்டனர். விசாரணை பாதிக்கக் கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் அனைவரது பெயரையும் தொடர்ந்து ரகசியமாக வைத்துள்ளனர். மற்ற 5 மனித வெடி குண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களையும் இலங்கை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் பற்றிய விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐ.எஸ்.பங்கரவாத இயக்கம் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதிகளில் 3 பேர் அபுஉபைதா, அபுபாரா, அபு முக்தர் என்று அறிவித்துள்ளது.
இந்த 3 பேரும்தான் சங்ரி-லா, சின்னமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்களை தகர்த்தவர்கள் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த 3 பேரில் 2 பேர்தான் கொழும்பு கோடீஸ்வரரின் மகன்கள் என்று கருதப்படுகிறது.
அதுபோல கொழும்பு, நெகோம்பா, மட்டகளப்பு ஆகிய இடங்களில் உள்ள 3 தேவாலயங்களை தகர்த்தவர்கள் அபுஹம்சா, அபு கலில், அபுமுகமது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7-வது மனித வெடிகுண்டாக செயல்பட்டவர் அபுஅப் துல்லா என்று தெரிய வந்துள்ளது.
இவர் கொழும்பில் உள்ள இந்தியரின் ஓட்டலை தகர்ப்பதற்காக நுழைந்தார். அந்த சமயத்தில் கொழும்பில் குண்டு வெடித்து பரபரப்பு ஏற்பட்டு காட்டுத்தீயாக தகவல்கள் பரவி இருந்தது.
அந்த சமயத்தில்தான் 7-வது மனித வெடிகுண்டு ஓட்டலுக்குள் நுழைய முயன்றது. ஆனால் அங்கு செய்யப்பட்டு இருந்த பலத்த பாதுகாப்பு காரணமாக அவரால் தாக்குதலை நடத்த இயலவில்லை. தன்னை சிலர் சந்தேகத்துடன் பார்ப்பதை அறிந்த அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
கொழும்பு புறநகரில் ஒரு வீட்டுக்குள் அவர் சென்றார். அவரை பிடிக்க போலீசார் வீட்டுக்குள் புகுந்தபோது அவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து 3 போலீஸ்காரர்களை கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, மட்டகளப்பில் நாசவேலையில் ஈடுபட்ட 7 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகளும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கிர்-அல்- பகததியை சந்தித்துள்ளனர். அந்த படம் தான் அந்த அமக் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 7 பயங்கரவாதிகளும் இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கொழும்பை தகர்க்க உறுதி மொழி எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் சதி திட்டம் தீட்டப்பட்டு இலங்கையில் ரத்த ஆறு ஓட விடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.