எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதால் ஐ.பி.எல். தொடரில், சில அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
8 அணிகள் பங்கேற்பு...
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளில், வெளிநாட்டு அதிரடி வீரர்கள் பங்கேற் றுள்ளனர். அவர்கள்தான் அணிகளை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
பட்டியல் ஒப்படைப்பு...
சிஎஸ்கே அணியில், வாட்சன், இம்ரான் தாஹிர், பிராவோ, டுபிளிசிஸ், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஸ்டோயினிஸ், ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கான், ராஜஸ்தான் அணியில் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் உட்பட ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை, அந்தந்த நாடுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அளித்துள்ளது.
இங்கிலாந்து...
இதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகள் உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பிக்க இருக்கின்றன. இதனால் ஐ.பி.எல். தொடர் முடியும் முன்பே, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப உள்ளனர். வரும் 26 ஆம் தேதிக்குள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள், திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதனால் அவர்கள் சென்றுவிட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், மே 2 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்கள் விரைவில் திரும்புகின்றனர்.
டேவிட் வார்னர்...
ஐதராபாத் அணியின் தூணாக இருக்கும் டேவிட் வார்னரும் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவும் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக மார்டின் குப்தில் இருக்கிறார். ஏற்கனவே கனே வில்லியம்சன் ரன் எடுக்கத் தவித்து வரும் நிலையில், வார்னரும் பேர்ஸ்டோவும் இல்லாதது அந்த அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.
பென் ஸ்டோக்ஸ்...
பெங்களூரு அணியில், மொயின் அலி (10 போட்டிகளில் 8 விக்கெட், 216 ரன்), ஸ்டோயினிஸ், ஸ்டெயின், டிம் சவுதி ஆகியோர் அணியில் இருந்து விலக உள்ளனர். இதனால் அந்த அணி இன்னும் போராட வேண்டியிருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கிறது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் ஏற்கனவே இங்கிலாந்து சென்றுவிட்டார். பென் ஸ்டோக்ஸ் செல்ல இருக்கிறார். ஸ்மித் இன்னும் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார்.
ஆன்ட்ரூ ரஸல்...
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, பஞ்சாப், டெல்லி அணிகள், வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றாலும் அதிகம் பாதிப்பைச் சந்திக்காது. சென்னை அணியில் டுபிளிசிஸ், இம்ரான் தாஹிர், டெல்லி அணியில் ரபாடா, மும்பை அணியில் டி காக் ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு செல்ல இருக்கின்றனர். கொல்கத்தா அணியின் தூணாக இருக்கும் ரஸல் இல்லாததது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நியூசி. அறிவிப்பு...
சென்னை அணியில் இருக்கும் மற்ற வீரர்களான வாட்சன், பிராவோ ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்களால் பிரச்னை இல்லை. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்களை ஐ.பி.எல். முடிந்த பிறகு வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது. அவர்களும், உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து விளையாடுவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.