முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் திரும்பினார் தங்க மங்கை கோமதி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தமிழகம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தன்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என கூறிய அவர், தமிழ்நாடு அரசு உதவி செய்தால் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து