முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவியுடன் ஒன்றாக வாக்களிக்க முடியாத நிலையில் விராட் கோலி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சார்மா  உடன் மும்பையில் ஓர்லி பகுதியில் வசித்து வருகிறார். அனுஷ்கா சர்மாவிற்கு மும்பையில் ஓட்டு உள்ளது. இதனால் விராட் கோலியும் தனது வாக்கை மும்பையில் பதிவுசெய்ய விருப்பம் தெரிவித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வேறு இடங்களில் வாக்களிக்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாக இருந்தது.

விராட் கோலி தாமதமாக ஆன்லைனில் பதிவு செய்து உள்ளதால் அவரது விண்ணப்பத்தை தேர்தல் ஆணையைம் நிலுவையில் வைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, 'விராட் கோலியின் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. ஆனால், அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் நடப்பு மக்களவை தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது. வரும் தேர்தல்களில் அவர் வாக்களிக்க முடியமா என்பதை ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.மும்பை தெற்கு தொகுதிக்கு வரும் 29-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து