முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2019      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் ,- விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின்  பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்  மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தலைமையில் இன்று (30.04.19) நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
 விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக அமைக்கப்படவிருக்கும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் 23.04.2019 அன்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக பொது மக்களின் தகவலுக்காக உரியவாறு வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற இருந்த சாதாரண உள்ளாட்சித் தேர்தலுக்கு 7 நகராட்சிகளில் 450 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் 160 வாக்குச்சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2109 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 2719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, வெளியிட்டுள்ள 2019-வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலில் 7 நகராட்சிகளில் இராஜபாளைத்தில் 112 வாக்குச்சாவடிகளும், திருவில்லிபுத்தூரில் 66 வாக்குச்சாவடிகளும், அருப்புக்கோட்டையில் 72 வாக்குச்சாவடிகளும், சிவகாசியில் 62 வாக்குச்சாவடிகளும், சாத்தூரில் 43 வாக்குச்சாவடிகளும், விருதுநகரில்; 61 வாக்குச்சாவடிகளும், திருத்தங்கல்லில் 25 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 441 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டியில் 15, சேத்தூரில் 18, மல்லாங்கிணரில் 15, மம்சாபுரத்தில் 19, காரியாபட்டியில் 15, சுந்தரபாண்டியத்தில் 15, எஸ்.கொடிக்குளத்தில் 15, வ.புதுப்பட்டியில் 15, வத்திராயிருப்பில் 18 என மொத்தம் 145 வாக்குச்சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் அருப்புக்கோட்டையில் 154, விருதுநகரில் 284, காரியாபட்டியில் 149, திருச்சுழியில் 162, நரிக்குடியில் 177, இராஜபாளையத்தில் 207, திருவில்லிபுத்தூரில் 152, வத்திராயிருப்பில் 117, சிவகாசியில் 320, வெம்பக்கோட்டையில் 209, சாத்தூரில் 181 என மொத்தம் 2112 வாக்குச்சாவடிகளும் என ஆக மொத்தம் 2698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

         மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, மேற்கண்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், நகர்புற உள்ளாட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால்; அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
 தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கூடுதலாக அமைக்கப்படவிருக்கும் வாக்குச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதும் உறுதி செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கவோ அல்லது அருகில் உள்ள நல்ல கட்டிடங்கள்  தேர்வு செய்யவோ ஆலோசனைகள் இருந்தால் 02.05.2019 தேதிக்குள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்து பூர்வமாக கோரிகைகள் அளிக்கலாம். வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக வரப்பெறும் ஆட்சேபனைகள், கருத்துருக்களை பரிசீலித்து தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு 04.05.2019 அன்று வாக்குச்சாவடி வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்டு 06.05.2019 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர்சுரேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்)பழனி மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளின் வாக்குப்பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து