முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிருதிக் பாண்டியாவுடன் கைகுலுக்காதது ஏன்? ஹர்ஷா போக்லே விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஆட்ட நாயகன் விருதை அறிவிக்கும் போது ஹிருதிக் பாண்டியாவுடன் கைகுலுக்காததற்கு இதுதான் காரணம் என்று ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 133 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஆட்டநாயகன் விருதை பெற்றார். போட்டி முடிந்த பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளரில் ஒருவரான ஹர்ஷா போக்லே விருதை வழங்கும் விழாவை தொகுத்து வழங்கினார். அப்போது ஆட்ட நாயகன் விருதை பெற்ற ஹிருதிக் பாண்டியா அவருடன் கைகுலுக்க கையை நீட்டினார். ஆனால் ஹர்ஷா கைகுலுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் கேமராவுக்காக திரும்பியதால் கைகுலுக்க முடியாமல் போனது என்று உடனடியாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ஹர்ஷா போக்லோ தனது டுவிட்டர் பக்கத்தில், போட்டி முடிந்த பின்னர் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஹிருதிக் பாண்டியாவுடன் சிறப்பாக பேசிக்கொண்டிருந்தேன். அவருடனான பேச்சு எளிதாக சென்றது. அவர் கைகுலுக்க முயற்சி செய்யும் போது, நான் கேமராவுக்காக திரும்பி விட்டேன். இனிமேல் அது போன்று நடக்காது என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து