முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திருப்பதியில் சாமி தரிசனம்

வியாழக்கிழமை, 9 மே 2019      விளையாட்டு
Image Unavailable

திருமலை : ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றிபெற வேண்டி கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திருப்பதியில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.   

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ந்தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் நேற்று காலை திருப்பதி வந்தார்.

காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று லட்டு பிரசாதம் வழங்கினர். 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று காலை சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து