முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முதல்வரை மகனுடன் சந்தித்து பேசிய துரைமுருகன்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
Image Unavailable

அமராவதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்டாலினை நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் தற்போது துரைமுருகன், ஆந்திர தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது பேசினார். இந்தச் சந்திப்பின் போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார்.

சுமார் 20 நிமிடம் நடந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூறிய துரைமுருகன் இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து