முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானங்களை எந்த நாட்டுக்கும் விற்பனை செய்ய மாட்டோம்: இந்தியாவிடம் அமெரிக்க நிறுவனம் உறுதி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள எப்-21 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டால், வேறு எந்த நாட்டுக்கும் அந்தப் போர் விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நிறுவனம், போர் விமானங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. அந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் விவேக் லல், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,

மேம்படுத்தப்பட்ட என்ஜின், மின்னணு போர்க் கருவிகள், அதிக ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் ஆகியவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எப்-21 போர் விமானம், இந்தியாவில் உள்ள 60-க்கும் மேற்பட்ட விமானப் படைத் தளங்களில் இருந்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை லாக்ஹீட் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்டால், அந்த விமானங்களை உலகின் வேறு எந்த நாடுகளுக்கும் விற்பனை செய்ய மாட்டோம். மேலும், இந்த ஒப்பந்தம் இறுதியானால், டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் போர் விமானங்கள் தயாரிப்புக்கான வசதிகளை செய்து கொடுப்போம். இது, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் இந்தியா ஒட்டுமொத்தமாக வளர்ச்சி அடைவதற்கான சூழலை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து