எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓட்டப்பிடாரம் : மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமல்ஹாசனின் பிண்ணனி குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தூத்துக்குடி தனியார் விடுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது,
ஒரு சமுதாய சீர்கேட்டை உருவாக்கும் வகையில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கமலஹாசன் பேசி வருகின்றார். என்னை பதவி விலக சொல்வதற்கு கமல்ஹாசன் கட்சி ஒன்றும் ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. நான் எங்கும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசவில்லை. இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என்பதை கமல்ஹாசன் எப்படி சொல்லலாம். இலங்கையில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தன் பிள்ளைகள் செத்தால் கூட கவலைப்படுவதில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர். ஒரு மதத்தை கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது. தீவிரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கைக்கும், தமிழகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அங்கு ஒரு பாதிப்பு என்றால் கூட தமிழகத்தில் வலி எடுக்கும். இலங்கையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று கமலஹாசன் கூறியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
சுதந்திரத்துக்குப் பிறகு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழுவும், மகாத்மா காந்தி தலைமையில் ஒரு குழுவும் சேர்ந்து பேசி சுமூக முடிவு ஏற்படும் போது எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர். எத்தனை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இது கமலஹாசனுக்கு தெரியுமா? நமது இரு பிள்ளைகளும் இப்படி கொல்லப்படுகிறார்கள் என்று நினைத்து வாகா எல்லை கண்ணீர் விட்டு அழுதது. இதையெல்லாம் பார்த்து பார்த்து மதக் கலவரங்களும் குறைந்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமலஹாசனின் இந்த கருத்து இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலை. இது போன்ற செயல்களை அவர் செய்யவும் கூடாது. பேசவும் கூடாது. கமலஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் பயங்கரவாதம் முதல் இந்து என்று கூறினார். ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக் கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரு மதத்தையும் சண்டை இழுத்து விட நினைக்கின்றார். கமல்ஹாசனை மத்திய உளவுத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இஸ்லாமியர்களை நான் இப்போது கூட அப்பு மார்கள் என்றுதான் உறவைச் சொல்லி கூப்பிடுவேன். தூத்துக்குடியில் நாலுமாவடியில் மோகன் லாசரை பார்த்து நான் ஆசி பெற்று தான் வந்துள்ளேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய நடத்தும் நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன். கமல்ஹாசன் பேசும் போது யாராவது ஒருவர் நீ பார்த்தாயா என்று தட்டிக் கேட்டிருந்தால் என்னவாயிருக்கும். அங்குதான் தீவிரவாதம் உருவாகி வருகிறது. அங்குதான் பிரச்சினை உருவாகும். கலவரம் உருவாகும். மதவாதத்தை தூண்டி விடும் கமல்ஹாசன் பின்னணியை மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும். ஒரு வேகத்தில் பேசி விட்டேன் என்று கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். யாரையும் துன்புறுத்த வேண்டும். மனது புண்படும்படி பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. மக்களின் கோபங்கள் எப்படி வெளிப்படும் என்பதைத் தான் நான் கூறியிருந்தேன். அவர் திருந்துவதற்காகத்தான் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன். இந்துகள் வருத்தப்பட வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தால் நான் வாபஸ் பெறுகின்றேன். நான் பேசியதை அவருக்கு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவற அராஜகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்து மதத்தை பேசியது போன்று வேற ஏதாவது ஒரு மதத்தை கமல்ஹாசன் இப்படி பேச முடியுமா? இந்துவையும் இந்து மதத்தையும் வம்புக்கு இழுப்பதை சில கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க.வில் சில பேச்சாளர்கள் என அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனும் சேர்ந்து இருக்கின்றார். தேர்தல் வந்தால் திருச்செந்தூரில் சென்று சாமி கும்பிடுகின்றனர். சிவன் கோயில் சென்று சாமி கும்பிடுகின்றனர். திருநீறு, குங்குமம் வைக்கின்றனர். பிறகு எதற்கு யாரை திருப்திப்படுத்த இந்து மதத்தை அவமரியாதையாக பேசுகின்றனர். ஏழைகளுக்கு உதவக் கூடியவர்கள் கடவுள் என்றுதான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. கமல்ஹாசன் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவர் இத்தாலி நாட்டிற்குத்தான் போக வேண்டும். இந்துகளை அவமரியாதையாக பேசி விட்டு அதை ஆதரித்து பேசுவது முட்டாள்தனம். இந்து பெண்கள் புனிதமாக போற்றும் தாலியை அறுத்து வீடியோ வெளியிட்டு வரும் வீரமணி அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் அடக்கி வைக்கும் நிலை ஏற்படும். நான் பேசியது எதையும் சட்டத்திற்கு விரோதமாக பேசவில்லை.. ஒரு மேடையில் சாதாரண ஒருவர் பேசினால் அது பெரிய செய்தியாக வராது. கமல்ஹாசன் நடிகர் என்பதால் அவரது பேச்சு பெரிதாக பேசப்படும். கமல்ஹாசனி தவறான பேச்சை கண்டிக்காவிட்டால் அவர் பேசிக் கொண்டே இருப்பார். என்னிடம் சில இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் பேசினார்கள். என்னுடைய கருத்தை அவர்கள் வரவேற்றனர். எல்லா மதத்திலும் மத ஆர்வலர்கள் இருப்பார்கள். அவர்களை தூண்டிவிடும் வகையில் கமல்ஹாசன் பேசக்கூடாது. நாக்கை நான் அறுப்பேன் என்று கூறவில்லை. நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்றுதான் கூறினேன். கமல்ஹாசனின் பேச்சு நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமூக நல்லிணகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டிவிடும். அதைத்தான் நான் கண்டித்தேன். அமைதியாக நடைபெறும் தேர்தலை மட்டுமல்ல, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் உள்ள கமல்ஹாசனின் பேச்சை அனைவரும் கண்டிக்க வேண்டும். எடப்பாடியார் ஆட்சியில் மதநல்லிணக்கமான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரிவினவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் கமல்ஹாசனின் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். கமல்ஹாசன் தனி வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். அவரைப் பற்றி நிறைய குற்றச்சாட்டு வைக்கலாம். அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் ஒரு அரசியல் பச்சோந்தி. அவரை நம்பி சென்றவர்களை நட்டாற்றில் விட்டு சென்று விடுவார். ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். தற்போது பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்களோடும் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். எந்த எம்.பி. தொகுதியிலும் தி.மு.க. ஜெயிக்க முடியாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.