முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கி உத்தரவிட்டது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் ராஜீவ்குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றுவதற்காக, ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சி.பி.ஐ. காவலில் எடுக்க அனுமதி கேட்கிறது என அவரது  வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராஜீவ்குமாரை, சி.பி.ஐ. கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. 7 நாட்களில் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அதற்குள் உரிய நீதிமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து