முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி. சி 46 ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்க முன்பதிவு தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ரேடார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட் 2 பி-யை தாங்கிய படி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து  வரும் 22-ம் தேதி காலை 5.27 மணிக்கு அந்த ராக்கெட்டை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்திருப்பதாகவும், அதற்கான கவுண்ட்டவுன் 21 ம் தேதி தொடங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன பயன் ?

இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்கும் பணிகளில் அந்த செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட உள்ளது. ரிசாட் 2-பி செயற்கைக்கோளில் உயர்தொழில்நுட்பத்திலான அதி நவீன இமேஜிங் சாதனம் உள்ளது. அதன் வாயிலாக, புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

முன்பதிவு தொடங்கியது

பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 555 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை பொதுமக்கள் நேரடியாக காணும் வசதி அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக திறந்தவெளி அரங்கு ஒன்றும் கட்டப்பட்டது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த அரங்கில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. பொது மக்கள்  https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து