முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. ஆட்சியமைப்பதை தடுப்பற்கான பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுக்குப்பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின் கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் மீண்டும் ராகுலை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரியுடன் நடத்திய ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து