முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி சென்னை அணிக்கு முதல் பரிசு

புதன்கிழமை, 22 மே 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் வைர விழா ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் பி.எஸ்.டி நினைவரங்கில்  கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் 19ம் தேதி முதல் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி இந்திய தரைப்படை ரெட் அணியும், செகந்திராபாத் ஏஓசி அணியும் மோதின இதில் டெல்லி அணி 105-83 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை இந்தியன் வங்கி பேங்க் ஆப் பரோடா அணியை 98-61 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வென்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு பி.சி.சிதம்பரசூரியவேலு வழங்கும் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பையையும், ரூபாய் 60 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த பேங்க் ஆப் பரோடா அணிக்கு வடுகபட்டி டாக்டர் செல்வராஜ் வழங்கும் எ.வி.அழகுசங்கரலிங்கம் செட்டியார் நினைவு சுழற்கோப்பை மற்றும் 40 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த புதுடெல்லி இந்திய தரைப்படை ரெட் அணிக்கு வி.பி.தனபால் வழங்கும் எல்.வி.பொன்னையாநாயுடு-சீத்தம்மாள் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூபாய் 30 ஆயிரமும்,  நான்காம் இடம் பிடித்த செகந்திராபாத் ஏஓசி அணிக்கு செல்வகுமாரபாண்டியன் மற்றும் மும்பை ரமேஷ் வழங்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூபாய் 20 ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஜே.சி குழுமம் ஹேமந்த், அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் பவுன்கோயபல்ஸ் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தலைவர் அமர்நாத், துணைத்தலைவர் அபுதாஹீர், செயலாளர் சிதம்பரசூரியவேலு, பொருளாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து