முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16-வது மக்களவையை கலைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பு

சனிக்கிழமை, 25 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 16-வது மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவை கலைக்கும் தீர்மானம் நிறைவேறிய பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சென்று சந்தித்த பிரதமர் மோடி தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களையும் சமர்ப்பித்தார். அப்போது புதிய அரசு உருவாகும் வரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா, ஜனாதிபதியிடம் அளித்தார். இந்த நிலையில், அமைச்சரவை பரிந்துரையை ஏற்று , 16-வது மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து