முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநில சட்டமன்ற கட்சித்தலைவராக ஜெகன் மோகன் தேர்வு

சனிக்கிழமை, 25 மே 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : ஆந்திர மாநில சட்டமன்ற கட்சி தலைவராக (புதிய முதல்வராக)ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து