முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் சந்திப்பு - பதவியேற்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் வரும் 30-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல்வர்  சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். அவரை மாநில கவர்னர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, 30-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் ஜெகன் மோகனுடன் விஜய சாய் ரெட்டி மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து