முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டாவது முறையாக பதவியேற்கும் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட துணை ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக அடுத்த பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு வாழ்த்து தெரிவித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவருடன் சிற்றுண்டி அருந்திய போது நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது மற்றும் பாராளுமன்ற அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து