முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் காவல்துறை சார்பில் புகார்மனுக்கள் தீர்வு காணும் முகாம்

திங்கட்கிழமை, 27 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவுப்படி புகார் மனுக்கள் மீது தீர்வு காணும் முகாம் (பெட்டிசன்மேளா) நடந்தது. இதற்கு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை தாங்கினார். இதில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புகார் மனுக்களின் மனு தாரர், எதிர்மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்க பட்டது.இதில் இடத்தகராறு, குடும்ப பிரச்னை உள்ளிட்ட நிலுவையில் இருந்த 116 மனுக்கள் வரப் பெற்று  விசாரணை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சாந்தா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து