முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை தாக்குதல் நடத்திய குழுக்களை உருவாக்கியது ராஜபக்சே சகோதரர்கள்தான் - இலங்கை முன்னாள் அமைச்சர் கருத்து

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : ஈஸ்டர் பண்டிகையின் போது தாக்குதல் நடத்திய தற்கொலை குழுக்களை ராஜபக்சே சகோதரர்கள் தான் உருவாக்கினார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கருத்து தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத்தை போன்று பல்வேறு இஸ்லாமிய குழுக்களை கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சேவுமே உருவாக்கியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ், முஸ்லீம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவே இவ்வாறான குழுக்களை அவர்கள் உருவாக்கியதாக தெரிவித்த மேர்வின் சில்வா, சிங்கள பவுத்த நாடான இலங்கையை மாற்றியமைக்க யாராவது முயற்சி செய்தால் இனப்படுகொலை செய்தாவது நாட்டை பாதுகாக்க தயங்க மாட்டேன் எனவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து