முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சியாச்சின் பனிமலைக்கு இன்று ராஜ்நாத்சிங் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சியாச்சின் பனிமலைக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 கேபினட் மந்திரிகள் உள்பட 57 மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர். இதில், முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்பு துறை வழங்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர் முறைப்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார். இதன்பின் அவர் தனது முதல் பயணமாக இன்று சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார். இந்த பயணத்தின் பொழுது ராணுவ தளபதி பிபின் ராவத்தும், ராஜ்நாத் சிங்குடன் செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து