முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த காங். செய்தி தொடர்பாளரான நடிகை டுவிட்டரில் இருந்து விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை திவ்யா ஸ்பந்தனா (குத்து ரம்யா) திடீரென டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாத காலத்திற்கு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திவ்யா டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். பின்னரே அவரது டுவிட்டர் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பதிவுக்கு கட்சியினுள் கண்டனங்கள் எழுந்ததால் டுவிட்டரிலிருந்து வெளியேறினாரா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவிடம் கேட்ட போது பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து