முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பட்ட மரக்கன்றுடன் செல்பி எடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 5 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு அதனோடு செல்பி எடுத்து பகிரும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் துவங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் அனைவவரும் மரக்கன்றுகளை நட்டு அதனோடு செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பகிர அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி மரக்கன்று ஒன்றை நட்டு அதனோடு செல்பி எடுத்து பகிர்ந்திருந்த அவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் ஆகியோருடன் டெல்லி பர்யவரன் பவனில் நேற்று மரக்கன்றுகளை நட்டார். மேலும் பலரும் மரக்கன்று நட்டு செல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து